Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts
Saturday, October 15, 2011
why crying?
A wise man sat in the autdience and craked a joke.
Everybody laughs like crazy
After a moment, he cracked the same joke again,
This time less people laughed.
He cracked the same joke again and again
When there is no laughter in the crowd.
HE SMILED AND SAID
you can't laugh at the same joke again and agian.
but why do you keep crying over the same thing over and over again.?
Everybody laughs like crazy
After a moment, he cracked the same joke again,
This time less people laughed.
He cracked the same joke again and again
When there is no laughter in the crowd.
HE SMILED AND SAID
you can't laugh at the same joke again and agian.
but why do you keep crying over the same thing over and over again.?
Labels:
சுட்டது,
படித்ததில் பிடித்தது,
மனம்,
வாழ்கை
Sunday, July 10, 2011
குழப்பும் எண்ணம்.. எழுத்து.. மனம்.
பொட்டி முன் தட்டிக் கொண்டிருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. கைவிட்டாச்சு !
தேடும் தேடல் தொடர்ந்தாலும் பாவம் ஏனோ அது கிடைக்கவில்லை..!
கிடைக்கும் என்றோர் நம்பிக்கையில் கிடைக்காமல் போனால் கவலை கூட வர மறுக்கிறது.!
இந்நிலை தொடர்ந்தால் ...?
குழப்பும் நெஞ்சில் குழப்பம் இருக்கிறது
அது அழுத்தி அழுத்தம் தருகிறது..
வலியும் வருகிறது..
வந்தால் பயமும் வருகிறது..
போனால் போகட்டும் போடா என்று விடவும் முடியவில்லை
தத்தி பேசும் தத்துவம் வந்தாலும் உறுதியாய் நம்ப உண்மை இடம் தரவில்லை..
எது உண்மை என்றும் தெரியவில்லை .. குழப்பம் தொடர்கிறது..
ஒன்றும் புரியவில்லை..
மனதின் அலைகளுக்கு ஓர் உருவமில்லை.. அதற்கு அர்த்தமும் இல்லை அது போலதான் இந்த எழுத்துகளும்.
தேடும் தேடல் தொடர்ந்தாலும் பாவம் ஏனோ அது கிடைக்கவில்லை..!
கிடைக்கும் என்றோர் நம்பிக்கையில் கிடைக்காமல் போனால் கவலை கூட வர மறுக்கிறது.!
இந்நிலை தொடர்ந்தால் ...?
குழப்பும் நெஞ்சில் குழப்பம் இருக்கிறது
அது அழுத்தி அழுத்தம் தருகிறது..
வலியும் வருகிறது..
வந்தால் பயமும் வருகிறது..
போனால் போகட்டும் போடா என்று விடவும் முடியவில்லை
தத்தி பேசும் தத்துவம் வந்தாலும் உறுதியாய் நம்ப உண்மை இடம் தரவில்லை..
எது உண்மை என்றும் தெரியவில்லை .. குழப்பம் தொடர்கிறது..
ஒன்றும் புரியவில்லை..
மனதின் அலைகளுக்கு ஓர் உருவமில்லை.. அதற்கு அர்த்தமும் இல்லை அது போலதான் இந்த எழுத்துகளும்.
Friday, January 1, 2010
மரத்தின் மயக்கம்
வடுக்கள் விழுதுகளாய் ஆழ்மனதில் ஊன்றி ஊரிப் போனது. அதன் வேர்கள் விழி நீரைத் தேடி விரைந்து விரிந்தது. அதனால் ஏற்பட்ட வலியாலும் உளைச்சலாலும் மரத்தின் மனம் வேகத்தொடங்கியது. பழங்களும் இலைகளும் அதன் வெப்பத்தை உணர்ந்தன. பறவைகள் படபடத்து பறக்க தொடங்கியது பயத்தினால். இதனால் ஒரு வித ஏக்கத்துடனே உதிர்ந்தது நிலத்தில். நிலமும் ஏக்கத்தோடு விழுந்த சருகுகளின் பாரத்தை தாங்கமுடியாமல் தவித்தது. அந்த நேரத்தில் வானில் இருந்து வந்த மழைத்துளியின் குளிர்ச்சியால் இதம் கண்டது மரம். இருக்கும் வரை இலையாக இணைந்து இருக்கும், இல்லாது போனால் சருகாக உதிர்ந்து உரமாகும் நிலையை கண்டு மரத்திற்கு மனம் தெளிவானது. வானமும் வெளியானது. காற்றின் தழுவல் மரத்தை மயங்க வைத்தது. உள்ளம் குளிர்ந்தது.
Saturday, November 21, 2009
காதலும் கோபமும்..
கடல் தாண்டி உலக உருண்டையின் மறு மூலையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இதயம் செவி வழி வரும் ஒரு குரலின் ஒலியால் அதிவேகமாக இயங்க துடிக்கிறது. தேசம் விட்டு தேசம் வந்தாலும் கோபம் எப்படியோ கொப்பளித்து வந்து விடுகிறது. அது சொல்லில் கலந்து சொல்லாமல் சூடேற்றிவிடுகிறது. மூச்சில் வரும் சூடு மூக்கையே புண்ணாக்கி விடும் போல அவ்வளவு கோபம். காதல் வந்த இதயத்தில் காமம் வருவது இயல்பு ஆனால் கோபம் எங்கிருந்து வந்தது? இதை அக்கறை என்றோ ஆதங்கம் என்றோ சொல்லி பசப்புவது காலங்காலங்காமாக் நடந்து வரும் சப்பை கட்டு. கோபத்தையும் காதலையும் சிண்டு முடித்து போட ஏனோ எனக்கு இப்போது பிடிக்க வில்லை. கத்தவேண்டும் எனத்தோன்றியது கத்தி விட்டேன். காதலுக்கு கண் இல்லை, செவி இல்லை, மூளையும் இல்லை. இதயத்தை கொடுத்துவிட்டு இல்லாத ஒன்றை இயங்க செய்வது கருமை நிறைந்த இருளில் கண்ணை மூடிக்கொள்வது போல. கனல் போன்ற வார்தைகளை கக்கியவுடன் மனதை வெற்றிடம் சூழ்ந்து கொள்கிறது. உறவின் சுமை உள்ளத்தை ஊமையாக்கியது - இது பல இந்தியப் பெண்களுக்கு பொருந்தும். சுடுகாட்டில் வீசும் தென்றலை உணரமுடியாது. அப்போது உள்ளம் சூழ் நிலை கைதியாகி இருக்கும். ஒரு நொடிப் பொழுதில் இதனிடமா நாம் மாட்டிக் கொண்டோம் என்ற எண்ணம் மின்னல்லாய் வந்து போனால் இரு உள்ளமும் அமைதி இழக்கின்றது. உடலின் இயக்கமும் எண்ணத்தின் மயக்கமும் இணைந்து நளினப்படுவது காதல் என்னும் மகரந்த நறுமணத்தினால்.
மனதின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றாற்போல மனிதன் வாழ்கையும் பார்க்கிறான். உருவக படுத்தக்கூடிய வேதனைகளை இறைவன் சிலருக்கு வழங்கி இருக்கிறான் – புண்ணியாவான்கள்!. உருவமில்லா வேதனைகளை சுமக்கும் மனித மனங்களை என்னவென்று சொல்ல – பாவிகள்! என்றா? சிரிப்பை உதட்டில் ஒட்டவைத்து அழும் நீரை ஆழ்மனதுள் வைத்து புதைத்து வெம்பி வெதும்பும் உயிர்கள் கணக்கில் அடங்கா.!
பல நாள் கழித்து கோபம் மறந்து போய் பேசப் போனால் குரலை கேட்டவுடன் அருகில் வந்து ஒட்டிக் கொள்கிறது கோபம். வாழ நினைத்து இறக்கத்துடிக்கும் காதல் கொண்டவர்கள்தான் நம் நாட்டில் ஏராளம். காதலுக்குள் கோபமும், கோபத்திற்குள் காதலும், தொண்டைக்குள் அடைப்பட்ட என்றும் கரையாத சர்க்கரைப் பந்து அதை விழுங்கவும் முடியாது வெளியே துப்பவும் முடியாது. அதன் சுவையாலேயே அதனால் ஏற்படும் வலியை மறந்து வாழ்கிறோம். உறவின் அனலால் உணர்வுகள் வெந்து கொண்டிருக்கிறது. உறவுகளின் இறுக்கம் சில நேரத்தில் நமக்கு தெரியாமலே வழி நடத்தும்.
மனதின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றாற்போல மனிதன் வாழ்கையும் பார்க்கிறான். உருவக படுத்தக்கூடிய வேதனைகளை இறைவன் சிலருக்கு வழங்கி இருக்கிறான் – புண்ணியாவான்கள்!. உருவமில்லா வேதனைகளை சுமக்கும் மனித மனங்களை என்னவென்று சொல்ல – பாவிகள்! என்றா? சிரிப்பை உதட்டில் ஒட்டவைத்து அழும் நீரை ஆழ்மனதுள் வைத்து புதைத்து வெம்பி வெதும்பும் உயிர்கள் கணக்கில் அடங்கா.!
பல நாள் கழித்து கோபம் மறந்து போய் பேசப் போனால் குரலை கேட்டவுடன் அருகில் வந்து ஒட்டிக் கொள்கிறது கோபம். வாழ நினைத்து இறக்கத்துடிக்கும் காதல் கொண்டவர்கள்தான் நம் நாட்டில் ஏராளம். காதலுக்குள் கோபமும், கோபத்திற்குள் காதலும், தொண்டைக்குள் அடைப்பட்ட என்றும் கரையாத சர்க்கரைப் பந்து அதை விழுங்கவும் முடியாது வெளியே துப்பவும் முடியாது. அதன் சுவையாலேயே அதனால் ஏற்படும் வலியை மறந்து வாழ்கிறோம். உறவின் அனலால் உணர்வுகள் வெந்து கொண்டிருக்கிறது. உறவுகளின் இறுக்கம் சில நேரத்தில் நமக்கு தெரியாமலே வழி நடத்தும்.
Friday, November 13, 2009
இருட்டில் இயங்கும் மனம்
இரவு நேர இருளில் இயங்கும் உலகம் தெரியவில்லை, அதனால் ஏற்படும் ஒலியும் கேட்கவில்லை. ஒளியின் அவசியம் புரிந்தது. இருளை தொட்டு கண்ணுக்கு மை இட்டு கொள்ளலாம் போல ஒரு கருமை. எந்த நிறம் இதில் கலந்தாலும் அது கரைந்து போய்விடும் போல இருந்தது. கண்ணை மூடினாலும் அதே இருள்தான். உறக்கம் பிடிக்கவில்லை. புரண்டு படுத்து படுக்கையை கலைக்க மனம் வரவில்லை. நினைவலை நெஞ்சில் ஓயாது அடித்துக் கொண்டிருந்தது. அதன் ஓசை மட்டும் அடி மனதிலிருந்து சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. செவி பொத்தினாலும் அது சத்தத்தை அதிக படுத்தி பாடாய் படுத்தியது. விளக்கை எழுப்ப விரல் வரவில்லை. கவலை என்னும் உணர்வை உணர்ந்தது மனம். நிறம், மணம் இல்லாமல் இருப்பதுதானே இந்த உணர்வும் உணர்ச்சியும். நினைவு நிழல் போல தொற்றிக் கொண்டது மனதை. உள்ளத்தில் இருக்கும் எழுத்துக்களை கோர்த்தாலும் முடித்து போடாத முத்து மாலையிலிருந்து சிதறும் முத்துக்களாய் வார்த்தைகள் சிதறி போயின. மணலுக்குள் புதையும் பாதமாய் நினைவுக்குள் மூழ்கியது நெஞ்சு. காற்றில் கரையும் மேகங்களாய் என் கனவுகளும் கலைந்தன.
Subscribe to:
Posts (Atom)
