Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts

Friday, May 25, 2012

என்ன வித்தியாசம்..?

ஐடில வேலை செய்றவங்களுக்கும் மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்?
நேரம் காலம் பார்க்காம பொட்டி தட்ட வேண்டும்..
மற்றவர்களுக்கு வேலை நேரத்தில் மட்டும் வேலை செய்தால் போதும்..

ஏசி அறை என்பதால் ஐடி வாசிகள் சிந்தும் வியர்வையும் வெளியில் தெரியாது
வீட்டிற்கு வந்த புது மணப்பெண்ணாய் யாரிடமும் சொல்ல முடியாமல் மென்று விழுங்கி .. துப்பவும் முடியாமல் இவர்கள் தவிக்கும் தவிப்பு அளவிடமுடியாதது.
மற்றவர்கள் அவர்கள் கஷ்டத்தை சொன்னாலும் மக்களுக்கு புரியும்..
ஐடி ஆள் .. ஆன் கால், விபின்னு சொன்னா யார் புரிஞ்சிக்குவாங்க.. ?

வீட்லையே கம்ப்யூட்டர்ல பாட்டு கேட்டுகிட்டு படம் பார்த்துகிட்டு இருக்கிறானுவன்னு சொல்லுவாங்க..
மக்களே இவங்க கஷ்டத்த மறைக்க இவுங்க செஞ்சிக்கிற ..... பூச்சு வேலை இது.. !

இதுல ஐடில வேலை பாக்கறவன வேண்டாம்னு .. கல்யாணம் செஞ்சுக்க பொண்ணுங்களும் இப்பெல்லாம் மறுக்கறாங்க..

ஒடுக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு.. இவுங்க கஷ்டபட்டு வந்தா..
சிலர் உங்களுக்கு என்ன ஐடில வேலை பாக்குறீங்கன்னு வயித்தெறிச்சலை கொட்டிக்கறாங்க
அடுத்த முறை ஐடி ஆள் யாரையாவது பார்த்தா கொஞ்ச இதெல்லாம் நினைச்சு பாருங்க..!

Thursday, February 25, 2010

கோபம் தன்னையே அழித்து விடும்

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்...
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...

· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...

· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...

· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...இப்படியே பல காரணங்கள் உள்ளன.
ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.
ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.
கோபம் தன்னையே அழித்து விடும்
மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.
ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.
கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்...

· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

· தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

· மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

· முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது....கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

· இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

· மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:
கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.


கோபத்தை குறைக்க சில வழிகள்:

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்

7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.

Saturday, November 21, 2009

காதலும் கோபமும்..

கடல் தாண்டி உலக உருண்டையின் மறு மூலையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இதயம் செவி வழி வரும் ஒரு குரலின் ஒலியால் அதிவேகமாக இயங்க துடிக்கிறது. தேசம் விட்டு தேசம் வந்தாலும் கோபம் எப்படியோ கொப்பளித்து வந்து விடுகிறது. அது சொல்லில் கலந்து சொல்லாமல் சூடேற்றிவிடுகிறது. மூச்சில் வரும் சூடு மூக்கையே புண்ணாக்கி விடும் போல அவ்வளவு கோபம். காதல் வந்த இதயத்தில் காமம் வருவது இயல்பு ஆனால் கோபம் எங்கிருந்து வந்தது? இதை அக்கறை என்றோ ஆதங்கம் என்றோ சொல்லி பசப்புவது காலங்காலங்காமாக் நடந்து வரும் சப்பை கட்டு. கோபத்தையும் காதலையும் சிண்டு முடித்து போட ஏனோ எனக்கு இப்போது பிடிக்க வில்லை. கத்தவேண்டும் எனத்தோன்றியது கத்தி விட்டேன். காதலுக்கு கண் இல்லை, செவி இல்லை, மூளையும் இல்லை. இதயத்தை கொடுத்துவிட்டு இல்லாத ஒன்றை இயங்க செய்வது கருமை நிறைந்த இருளில் கண்ணை மூடிக்கொள்வது போல. கனல் போன்ற வார்தைகளை கக்கியவுடன் மனதை வெற்றிடம் சூழ்ந்து கொள்கிறது. உறவின் சுமை உள்ளத்தை ஊமையாக்கியது - இது பல இந்தியப் பெண்களுக்கு பொருந்தும். சுடுகாட்டில் வீசும் தென்றலை உணரமுடியாது. அப்போது உள்ளம் சூழ் நிலை கைதியாகி இருக்கும். ஒரு நொடிப் பொழுதில் இதனிடமா நாம் மாட்டிக் கொண்டோம் என்ற எண்ணம் மின்னல்லாய் வந்து போனால் இரு உள்ளமும் அமைதி இழக்கின்றது. உடலின் இயக்கமும் எண்ணத்தின் மயக்கமும் இணைந்து நளினப்படுவது காதல் என்னும் மகரந்த நறுமணத்தினால்.
மனதின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றாற்போல மனிதன் வாழ்கையும் பார்க்கிறான். உருவக படுத்தக்கூடிய வேதனைகளை இறைவன் சிலருக்கு வழங்கி இருக்கிறான் – புண்ணியாவான்கள்!. உருவமில்லா வேதனைகளை சுமக்கும் மனித மனங்களை என்னவென்று சொல்ல – பாவிகள்! என்றா? சிரிப்பை உதட்டில் ஒட்டவைத்து அழும் நீரை ஆழ்மனதுள் வைத்து புதைத்து வெம்பி வெதும்பும் உயிர்கள் கணக்கில் அடங்கா.!
பல நாள் கழித்து கோபம் மறந்து போய் பேசப் போனால் குரலை கேட்டவுடன் அருகில் வந்து ஒட்டிக் கொள்கிறது கோபம். வாழ நினைத்து இறக்கத்துடிக்கும் காதல் கொண்டவர்கள்தான் நம் நாட்டில் ஏராளம். காதலுக்குள் கோபமும், கோபத்திற்குள் காதலும், தொண்டைக்குள் அடைப்பட்ட என்றும் கரையாத சர்க்கரைப் பந்து அதை விழுங்கவும் முடியாது வெளியே துப்பவும் முடியாது. அதன் சுவையாலேயே அதனால் ஏற்படும் வலியை மறந்து வாழ்கிறோம். உறவின் அனலால் உணர்வுகள் வெந்து கொண்டிருக்கிறது. உறவுகளின் இறுக்கம் சில நேரத்தில் நமக்கு தெரியாமலே வழி நடத்தும்.