Sunday, December 11, 2011

என் லைஃ பார்ட்னர் எப்படி இருக்கணும் தெரியுமா?

ஒரு விளம்பரம்...

காட்சி 1
இளைஞன் :என் லைஃ பார்ட்னர் எப்படி இருக்கணும் தெரியுமா?
இளைஞி: எப்படி இருக்கணும்.?
இளைஞன் : உன்ன மாதிரியே கண்ணு, உன்ன மாதிரியே வாய், ஆனா உன் நிறம் இல்ல.
உடனே இளைஞியின் முகம் வாடி விடுகிறது..

காட்சி 2
இளைஞி: அம்மா நீ ஏன் குங்குமபூ சாப்படல நான் வயத்துல இருக்கும் போது?
அம்மா: உனக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியும்.

உடனே இளைஞி ஒரு முக பசை தடவுகிறாள்.. சிறிது நாளில் (நேரத்தில்!) அவள் முகம் சிவந்து .. கருமை மறைந்து வெள்ளை வண்ணம் அடித்தது போல இருக்கிறது


காட்சி 3
சில நாட்களுக்கு பிறகு..
இளைஞன்: என்னோட வெட்டிங் கார்ட் பாக்கறியா?
இளைஞன் ஒரு காகித பொட்டலத்தை(!) பிரிக்கிறான் அதில் அந்த இளைஞியின் படம் தெரிகிறது..

உடனே அந்த இளைஞியும் ஆனந்ததில் சிரிக்கிறாள்.

நம் கலாச்சரமும் நம் மக்களின் 'சிவப்பு.. வெள்ளை' மோகமும் சேர்ந்து சிரிக்கிறது உலகெங்கும்.. !

நம்ம இளைஞர்களும் வெளுத்த தோல் மோகத்தில், பார்த்தவுடன் பல் இளிப்பது போலவும்.. நம் நாட்டு பெண்களும் எப்படா எவன்டா பார்ப்பான் என்று வழிவது போலவும் சித்தரிக்கிறார்கள்.. இதெல்லாம் நம்ப கலாச்சார சீரழிவு பற்றி வாய் கிழிய பேசும் சமூக ஆர்வலர்களின் கண்களுக்கு தெரியாதது வியப்புதான்.
என்ன கொடுமைடா சாமி.!

Saturday, November 5, 2011

மூத்தத் தமிழ்.. முத்தத் தமிழ்.!



கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000 இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000 முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000 யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000 நியாண்டெர்தல் மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000 கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000 தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000 தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000 ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000 ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527 முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100 பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்..

கி.மு. 10000 கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087 கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000 கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000 உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000 சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000 கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200 சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113 அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102 சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது. மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு - 3100 - 3000 ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600 எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387 இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000 காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915 திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900 வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500 முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450 உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316 மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250 மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200 ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000 உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600 வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950 அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950 வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925 யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900 இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின் இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776 கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி. குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750 பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700 சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543 கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600 லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600 கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527 மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560 பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478 கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500 கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478 இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450 ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348 சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400 கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328 உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270 மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326 அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305 சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302 சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300 சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300 கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232 மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245 சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்

கி.மு. 251 புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220 சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221 புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200 கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180 குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200 முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200 தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87 ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62 செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42 யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25 பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31 உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9 இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1 கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4 ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

தமிழ் பரிணாமம்


தமிழில் உள்ள எண்ணகளின் அளவு


தமிழில் எண்கள்

50 வது பதிவு தமிழைப் பற்றியும் நம் பழம் வரலாறு பற்றியும் பதிவிடுவதில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.

அரிது,கொடிது,பெரிது,இனிது,புதியது

IMpressing Words.


Saturday, October 15, 2011

why crying?

A wise man sat in the autdience and craked a joke.
Everybody laughs like crazy
After a moment, he cracked the same joke again,
This time less people laughed.
He cracked the same joke again and again
When there is no laughter in the crowd.
HE SMILED AND SAID
you can't laugh at the same joke again and agian.
but why do you keep crying over the same thing over and over again.?

Monday, August 22, 2011

புலம்பல்..!


பதினோறாம் வகுப்பு போகும் சின்ன பெண்ணிற்கு மணமுடிக்க பெற்றோர் அவசரம்.
மூன்று வருடம் முன்பு மணமுடித்தவருக்கு மறுமணம். முதலாமவர் விவாகரத்து..!
வீட்டை எதிர்த்து, மனம் விரும்பி காவல் நிலையத்தில் மணம் முடித்தவருக்கு மனமுறிவு.. விவாகரத்தில் முடிவு.
இணைந்து இறப்பதை விட பிரிந்து வாழ் - கோட்பாடுதான் இப்போதுள்ள நடைமுறை.
மேலே சொன்ன மூன்றும் கேட்டு திக்கி திணறி போனேன்.
என்ன கொடுமைடா இது..!
ஆனால் அதில் சில உண்மைகளும் இருக்கு.

Tuesday, July 12, 2011

திருநள்ளாறு பயணம்..

ரெய்யில் டிக்கெட் online book செஞ்சாலும் பல முறை print out எடுத்துவரும் முன் ஜாக்கரதை முத்தண்ணாக்களை ஏராளம் தொடர்வண்டியில் பார்க்க முடிந்த்து.
இரண்டு சீட் தள்ளி நன்கு முடி வளர்ந்து ஆளும் வளர்ந்து ஒருவன் மற்றும் ஒருத்தி உட்கார்ந்திருந்தார்கள். மடியில் கணினி(மடிகணினி) காதில் இருந்து இரு ஒயர்கள் வழிந்து சென்று அருகில் இருக்கும் தீப்பெட்டி சைஸ் கைபேசியில் முடிந்திருந்த்து. அந்த ஒயர் மூலம் கானம் ஒலித்துக் கொண்டிருந்த்தை அவன் தலை ஆட்டுவதை வைத்து கணிக்க முடிந்த்து.
மயிலாடுதுறையும் மாயவரமும் ஒன்றுதான் என்பது இந்த பயணத்தின் போது தெரிந்த்து. நல்லகாலம் அடுத்தவர் கேட்டு அசடு வழிவதை விட நமக்கு நாமே தெரிந்து அந்த அசடை நாமே வழிய விட்டுக் கொள்வதில் ஒரு தனி த்ரில்தான்.
அந்த தொடர்வண்டி ஆடும் ஆட்டத்தில்.. மஹும்.. அந்த தாலாட்டில் நல்ல உறக்கம் வந்தது. மேல் berth காலியாய் இருந்த்தால் மேலேறி நன்றாக உறங்கிவிட்டேன். மாயவரம் அடைய 1.30 மணியாகும் என்று சொன்னதால் 12.55க்கு கீழ் இறங்கி வந்தேன்.
ரயில் சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் கடந்து மாயவரம் என்கிற மயிலாடுதுறையை அடைந்த நேரம் 2.15 மணி.
இறங்கிய கூட்ட்த்தில் பாதி திருநள்ளாறு அல்லது திருகடையூர் போகும் நபர்கள்தான். மீதியெல்லாம் சொந்த ஊர், பக்கத்து ஊர் போகிறவர்கள்.
பசி ஆக்ரோஷ்மாய் அலற தொடங்கியதால் ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த சின்ன ஓட்டலில் சாப்பிட்டேன். ரூ.35 ஒரு சாப்பாடு.! ஷாக்தான் இருந்தாலும் வயிறு காயக்கூடாது. கொடுத்த காசுக்காகவாவது சாப்பிட வேண்டும் என்ற கொள்கை கொண்ட்தால் ருசியை ஓரம் கட்டி விட்டு சாப்பாட்டை ஒரு கட்டு கட்டினேன். அதற்குள் இரண்டு டவுன் பஸ் சென்றுவிட்ட்து.
அடுத்து வந்த்து சிற்றுந்து.
அதில் ஏறிய பின்பும் கூட்டம் அவ்வளவாக சேரவில்லை. கொஞ்சம் நேரம் கழித்துதான் வண்டி எடுத்தார்கள்.
பஸ் ஸ்டாண்டை அடைந்த்தும் கீழிறங்கி பார்த்தால் எந்த பேருந்திலும் ’திருநள்ளார்’ என்று போடவில்லை, காரைக்கால் போகும் பஸ்ஸையும் காணவில்லை.
பிறகு அங்கிருந்த போலீஸ்காரரிடம் வழி கேட்டபின் சொன்னார், ’அதுக்கு அந்த பக்கம் போங்க..’
சிறு தெரு வழியாக இன்னொரு பஸ் ஸ்டாண்டுக்கு போக வேண்டி இருந்த்து.
வழியில் கத்திரிக்காய், காரட் மற்றும் சில பச்சை காய்கறிகள் கூர் போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள்.
காரைக்கால் போக இரண்டு வழிகள் ஒன்று – திருநள்ளாறு வழி – சுருக்க செல்லும் வழி. இரண்டு – திருகடையூர் செல்லும் வழி – கொஞ்சம் சுற்று.
அப்படியும் ஒரு மணி நேரம் ஆயிற்று திருநள்ளாரு செல்ல..
சன்னதி தெருவில் இருக்கும் கல்யாண மண்டபத்தை அடைந்து.. வந்த இடம் சரிதானா என்று விசாரித்து வைத்துவிட்டு. நேரே கோவிலுக்கு சென்று சனீஸ்வர பகவானை தரிசிக்க சென்றேன் என் பெற்றோருடன்..
பணம்...பணம்... இங்கென்று இல்லை.. எங்கு போனாலும்.. எந்த கோவிலுக்கு போனாலும் மக்கள் பக்தர்களை(!) பார்ப்பது அருளால் அல்ல பொருளால்.!
பாவம் சனீஸ்வரர் .. அவரை வில்லனாக்கி பாக்கறாங்க நம்ப மக்கள்.. நமக்கு கஷ்டம் வரும் நேரத்தில் அவர் நம்ப கஷ்ட்த்தை மட்டு படுத்தறார்.. ஆனா அத நாம நம்பள கஷ்டபடுத்தறார்னு புரிஞ்சிகிட்டு கதை கட்டி விட்டுட்டோம்.
நளதீர்த்தம் பல கோடி செலவு செய்து சீரமைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் இப்போ அது இயங்கவில்லை.(!)
பிரம்ம தீர்த்த்த்தில் நிறைய பேர் குளித்துவிட்டு தாங்கள் உடுத்தி இருந்த ஏதாவது பழைய துணியை அதில் (அந்த குளத்தில்) போட்டு விட்டு செல்கிறார்கள். அருகிலே நிறைய ஷாஷே ஷம்பு மற்றும் எண்ணை பாக்கெட்டுகள் கிடைக்கிறது.. குளமும் வழுக்கு வழுக்கென்று வழுக்கிறது.
எல்லாவற்றையும் பார்த்தோம் வந்தோம். அவ்ளோதான்.
இது போன்ற கோவில் ஊர்களில் அரசாங்கத்தால் ஏற்படுத்தப் பட்ட பல அடிப்படை வசதிகள் இல்லை என்றாலும். தனியார் rooms available board நிறைய பார்க்க முடிகிறது. விலை விசாரிக்கவில்லை.
State Bank ATM, INDIAN Overseas Bank ATM இருக்கு.
எங்கள் குடுமப் நண்பர் மகன் திருமணத்திற்குதான் போயிருந்தோம்.. விமர்சையாக கல்யாணம் நடந்த்து.
காரைக்கால் 4 கிலோமீட்டர்தான். ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறினோம். 5 ரூபாய் ஒரு ஆளுக்கு ஜுலை மாதம் முதல். 10 நிமிடம் போய் சேர்ந்தோம்.
புளி மூட்டையை விட அதிகமாகவே மக்கள் அடைபட்டுக் கொண்டார்கள் ஷேர் ஆட்டோவில்.
பஸ் ஸ்டாண்ட் வரை செல்லாமல் கோவிலுக்கு என்று சொல்லி முன்பாகவே இறங்கிக் கொண்டோம்.
பிரஞ்சு காலணியின் கீழ் இருந்த்தால் எல்லா வீதிகளும் நேர் கோட்டில் இருந்த்து. 3 மெயின் ரோடு கொண்டததுதான் காரைக்கால்.
ஒரு சிவன் கோவில், ஒரு விஷ்ணு கோவில், காரைக்கால் அம்மையார் ஆலையம்.
மாங்கனி இறைத்தல் விழா இன்னும் சில தினங்களில் நடை பெற இருப்பதால், பந்தல் கட்டிக் கொண்டிருந்தார்கள்.
காரைக்கால் அம்மையார் ஆலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் பேருந்து நிலையம். திருக்கடையூர் பேருந்து பிடித்து வந்தடைந்தோம்.
கல்யாணத்திற்காகவே கட்டிய கோவில் போல் இருக்கிறது.
கல்யாணம் ஆனவர்களும், கல்யாணம் செஞ்சுக்க போறவங்களும், நிறைய பேர் கழுத்தில் மாலையுடன் கோவிலில் இருந்து வந்து கொண்டிருந்தார்கள்.
ஞாயிற்று கிழமை ஆகையால் கூட்டம் கூட்டம் செம்ம கூட்டம்..
கும்பாஷேகம் – இப்படி ஒரு ஹோட்டல் பெயர்.
கல் மண்டபம் ஆகையால் உள்ளே நுழைந்த சில நேரத்தில் வியர்வை நீரூற்றாக வழிந்த்து. கோவில் ப்ராகாரம் நெடுக்க கல்யாணக் கோஷ்டிகள்.
காமிரா அனுமதி இல்லை போர்டு கவனிப்பாரற்று தொங்கிக் கொண்டிருந்த்து. மெய்யாகவே அதை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. கையில் வித விதமான் வீடியோ மற்றும் டிஜிடல் காமிராக்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
தரிசனம் முடிந்து.. கோவிலை விட்டு வெளியே வந்தவுடன்.. சென்னை செல்லும் பேருந்து வந்து கொண்டிருந்த்து வேளாங்கன்னியிலிருந்து.. கை காட்டி நிறுத்து ஏறிக் கொண்டோம். 1.10 மதியம்..
சென்னை அடைந்தோம் 8.10க்கு.. ECR road வழியாக வந்தடைந்தோம்..
கிண்டி வந்தடைய 9.25 மணியானது.

Sunday, July 10, 2011

குழப்பும் எண்ணம்.. எழுத்து.. மனம்.

பொட்டி முன் தட்டிக் கொண்டிருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. கைவிட்டாச்சு !
தேடும் தேடல் தொடர்ந்தாலும் பாவம் ஏனோ அது கிடைக்கவில்லை..!
கிடைக்கும் என்றோர் நம்பிக்கையில் கிடைக்காமல் போனால் கவலை கூட வர மறுக்கிறது.!
இந்நிலை தொடர்ந்தால் ...?
குழப்பும் நெஞ்சில் குழப்பம் இருக்கிறது
அது அழுத்தி அழுத்தம் தருகிறது..
வலியும் வருகிறது..
வந்தால் பயமும் வருகிறது..
போனால் போகட்டும் போடா என்று விடவும் முடியவில்லை
தத்தி பேசும் தத்துவம் வந்தாலும் உறுதியாய் நம்ப உண்மை இடம் தரவில்லை..
எது உண்மை என்றும் தெரியவில்லை .. குழப்பம் தொடர்கிறது..

ஒன்றும் புரியவில்லை..
மனதின் அலைகளுக்கு ஓர் உருவமில்லை.. அதற்கு அர்த்தமும் இல்லை அது போலதான் இந்த எழுத்துகளும்.

Monday, April 25, 2011

Marriage - A Divorce attempt

MARRIAGE When I got home that night as my wife served dinner, I held her hand and said, I've got something to tell you. She sat down and ate quietly. Again I observed the hurt in her eyes. Suddenly I didn't know how to open my mouth. But I had to let ...her know what I was thinking. I want a divorce. I raised the topic calmly. She didn't seem to be annoyed by my words, instead she asked me softly, why? I avoided her question. This made her angry. She threw away the chopsticks and shouted at me, you are not a man! That night, we didn't talk to each other. She was weeping. I knew she wanted to find out what had happened to our marriage. But I could hardly give her a satisfactory answer; she had lost my heart to Jane. I didn't love her anymore. I just pitied her! With a deep sense of guilt, I drafted a divorce agreement which stated that she could own our house, our car, and 30% stake of my company. She glanced at it and then tore it into pieces. The woman who had spent ten years of her life with me had become a stranger. I felt sorry for her wasted time, resources and energy but I could not take back what I had said for I loved Jane so dearly. Finally she cried loudly in front of me, which was what I had expected to see. To me her cry was actually a kind of release. The idea of divorce which had obsessed me for several weeks seemed to be firmer and clearer now. The next day, I came back home very late and found her writing something at the table. I didn't have supper but went straight to sleep and fell asleep very fast because I was tired after an eventful day with Jane. When I woke up, she was still there at the table writing. I just did not care so I turned over and was asleep again. In the morning she presented her divorce conditions: she didn't want anything from me, but needed a month's notice before the divorce. She requested that in that one month we both struggle to live as normal a life as possible. Her reasons were simple: our son had his exams in a month's time and she didn't want to disrupt him with our broken marriage. This was agreeable to me. But she had something more, she asked me to recall how I had carried her into out bridal room on our wedding day. She requested that every day for the month's duration I carry her out of our bedroom to the front door ever morning. I thought she was going crazy. Just to make our last days together bearable I accepted her odd request. I told Jane about my wife's divorce conditions. . She laughed loudly and thought it was absurd. No matter what tricks she applies, she has to face the divorce, she said scornfully. My wife and I hadn't had any body contact since my divorce intention was explicitly expressed. So when I carried her out on the first day, we both appeared clumsy. Our son clapped behind us, daddy is holding mommy in his arms. His words brought me a sense of pain. From the bedroom to the sitting room, then to the door, I walked over ten meters with her in my arms. She closed her eyes and said softly; don't tell our son about the divorce. I nodded, feeling somewhat upset. I put her down outsidethe door. She went to wait for the bus to work. I drove alone to the office. On the second day, both of us acted much more easily. She leaned on my chest. I could smell the fragrance of her blouse. I realized that I hadn't looked at this woman carefully for a long time. I realized she was not young any more. There were fine wrinkles on her face, her hair was graying! Our marriage had taken its toll on her. For a minute I wondered what I had done to her. On the fourth day, when I lifted her up, I felt a sense of intimacy returning. This was the woman who had given ten years of her life to me. On the fifth and sixth day, I realized that our sense of intimacy was growing again. I didn't tell Jane about this. It became easier to carry her as the month slipped by. Perhaps the everyday workout made me stronger. She was choosing what to wear one morning. She tried on quite a few dresses but could not find a suitable one. Then she sighed, all my dresses have grown bigger. I suddenly realized that she had grown so thin, that was the reason why I could carry her more easily. Suddenly it hit me... she had buried so much pain and bitterness in her heart. Subconsciously I reached out and touched her head. Our son came in at the moment and said, Dad, it's time to carry mom out. To him, seeing his father carrying his mother out had become an essential part of his life. My wife gestured to our son to come closer and hugged him tightly. I turned my face away because I was afraid I might change my mind at this last minute. I then held her in my arms, walking from the bedroom, through the sitting room, to the hallway. Her hand surrounded my neck softly and naturally. I held her body tightly; it was just like our wedding day. But her much lighter weight made me sad. On the last day, when I held her in my arms I could hardly move a step. Our son had gone to school. I held her tightly and said, I hadn't noticed that our life lacked intimacy. I drove to office.... jumped out of the car swiftly without locking the door. I was afraid any delay would make me change my mind...I walked upstairs. Jane opened the door and I said to her, Sorry, Jane, I do not want the divorce anymore. She looked at me, astonished, and then touched my forehead. Do you have a fever? She said. I moved her hand off my head. Sorry, Jane, I said, I won't divorce. My marriage life was boring probably because she and I didn't value the details of our lives, not because we didn't love each other anymore. Now I realize that since I carried her into my home on our wedding day I am supposed to hold her until death do us apart. Jane seemed to suddenly wake up. She gave me a loud slap and then slammed the door and burst into tears. I walked downstairs and drove away. At the floral shop on the way, I ordered a bouquet of flowers for my wife. The salesgirl asked me what to write on the card. I smiled and wrote, I'll carry you out every morning until death do us apart. That evening I arrived home, flowers in my hands, a smile on my face, I run up stairs, only to find my wife in the bed - dead. My wife had been fighting CANCER for months and I was so busy with Jane to even notice. She knew that she would die soon and she wanted to save me from the whatever negative reaction from our son, in case we push thru with the divorce.-- At least, in the eyes of our son--- I'm a loving husband.... The small details of your lives are what really matter in a relationship. It is not the mansion, the car, property, the money in the bank. These create an environment conducive for happiness but cannot give happiness in themselves. So find time to be your spouse's friend and do those little things for each other that build intimacy. Do have a real happy marriage! If you don't share this, nothing will happen to you. If you do, you just might save a marriage. Many of life's failures are people who did not realize how close they were to success when they gave up.

Thursday, February 24, 2011

நண்பேண்டா..!

தேர்வில் வெற்றி பெற்றால்

அம்மா : என் புள்ளடா நீ
தங்கை : நீயா இது?
காதலி : சோ சுவீட்.. I know you can
நண்பன் : மச்சி ட்ரீட்..

தேர்வில் தோல்வி என்றால்..

அம்மா : எல்லாம் அந்த பாழப்போன செல்போன் தான் காரணம்..
தங்கை : தெரிஞ்ச விஷயம்தானே..
காதலி : எங்கூட பேசாதே.. I do not like ..
நண்பன் : மச்சி ட்ரீட்..

+++++++

ஆறுதல் சொல்ல உண்மையான நண்பன் இருந்தால்
“காதல் தோல்வி” கூட “காமெடி ப்ரோகிராம்” தான்..


Friends never Change.. that is Friendship.. நண்பேண்டா...!